அவனே உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கினான். அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக உங்களில் சிலரை விட சிலருக்குத் தகுதிகளை உயர்த்தினான். உமது இறைவன் விரைவாகத் தண்டிப்பவன்; அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.